புதன், 30 செப்டம்பர், 2015

கோமாதாக் கொலைகள்

பெற்ற பிள்ளையைப்
போல வளர்ப்பதாகச்
சொன்னீர்கள்.

பொங்கலுக்கு அதை
அழகாக்கி
கோமாதா வெனத்
தொழுது மகிழ்ந்தீர்கள்.

கன்றுக் குட்டிகளையும்
கறந்த பாலையும்
வரவுக் கணக்கில்
எழுதி வைத்தீர்கள்.

ஒரு படி அதிகம்
கறக்கும்
நாட்களிலெல்லாம்
மகாலட்சுமி என்று
புளகாங்கிதம் அடைந்தீர்கள்.

நேற்றைக்கு முந்தைய
தினம் அதை
லாரியில் வலுக்கட்டாயமாக
ஏற்றிவிட்டு
முகத்தைத் திருப்பிக் கொண்டீர்கள்.



_________

இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை ; எண் : 4

1 கருத்து: